மன்னை முத்துக்குமார்

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி கொண்டு இருக்கிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே இந்த எட்டு மணி நேர வேலை உரிமை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான்.

1899ல் நடைபெற்ற பன்னாட்டு சோசலிசப் பேரவையில் இந்நாளை தொழிலார் நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதொட்டு இன்று வரை, உலக நாடுகள் அனைத்திலும் உழைப்போர் மகிழ்வுடன் கொண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.


இது உலகாளாவிய ஒரு ஒப்பற்ற தினம், அதோடு தமிழகத்தில் இன்றும் தஞ்சை, நாகை , திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களிடம் நடைமுறையில் உள்ள அமாவாசை விடுமுறை மற்ற பகுதியில் இருப்பதாக தெரியவில்லை. இந்த பகுதியில் சமீப காலங்களில் சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஜமீன் அதிகாரம் கோல்லோச்சி தான் இருந்தது, குறிப்பாக திருவாரூர் மாவட்டம் களப்பால் பகுதியில் ஆண்டான் அடிமை முறை இருந்து இருக்கிறது. காலையில் 7 மணிக்கே வயலுக்கு போக வேண்டும் , தோளில் துண்டு போடக்கூடாது, வேலைக்கு வராதவர்களுக்கு சாட்டை அடி ,சாணிப்பால் என்ற கொடுமையும் நடந்து இருக்கிறது, கம்யூனிச பேரியக்கங்கள் தோழர் ஸ்ரீனிவாசராவ் அவர்கள் முயற்சியில் தென்பரை கிராமத்தில் தனது முதல் செங்கொடியை ஏற்றி போராடி இந்த ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் ,விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்த அவ்வியக்கங்களுக்கு தொழிலாளர்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாவர், அதோடு அமாவசை தினத்தையும் விடுமுறை நாளாக அமைத்து கொடுத்தனர், அந்த விடுமுறை இன்றும் இந்த பகுதிகளில் நடைமுறையில் உள்ளது..

வாழ்க தொழிலாளர் தினம், வெல்வோம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை..