மன்னை முத்துக்குமார்
குஷ்பு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி..
-
புதுதில்லி, ஏப். 28: கற்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
-
கடந்த 2005-ம் ஆண்டில் தமிழ்ப் பெண்களின் கற்பு மற்றும் திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தொடர்பாக பத்திரிகை பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
-
இதையடுத்து, இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், குஷ்பு மீதான 22 வழக்குகளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
-
கீழே உள்ள சுட்டியில் - பெரியார் சொன்னதையும் படிங்க , விபச்சாரமே ஒழுக்கத்திற்கு எதிரானது இல்லை எனும் போது சினிமா நடிகை குஷ்பூ சொன்ன திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளுதல் தவறில்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது..அங்கீகரித்துள்ளது என்பதை விட குஷ்பூவின் கருத்து சுதந்திரம் காக்கப்பட்டுள்ளது..
-
குஷ்பூவின் கருத்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு போய்விட்டது என்று கூக்குரலிடும் பழைமை வாதிகளே எது கலாச்சாரம்? என்று உற்று நோக்கினீர்கள் எனில் பார்ப்பானின் சாணக்கியத்தனம் புலப்படும் ..
-
2 Responses

  1. Unknown Says:

    பெரியாரின் கருத்தோடு குஷ்புவின் கருத்தை ஒப்பிடலாம...!!!?????....