மன்னை முத்துக்குமார்
சென்னை முழுமதி அறக்கட்டளை, சென்னை ப்ரீடம் அறக்கட்டளை மற்றும் போடிநாயக்கனூர் ரீமாஸ் அறக்கட்டளை இணைந்து 2011 ஜூன் மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மறுத்துவ முகாம் நடத்தப்பட்டது.


முகாமிற்கு கலைமாமனி பேராசிரியர் மருத்துவர் திரு.D.சுந்தர் அவர்கள் தலைமயேற்று நடத்தி தந்தார்கள்.


19-06-2011 அன்று போடிநாயக்கனூர் ஜ.கா.நி துவக்கப்பள்ளியில் காலை 9 மணிக்கு துவங்கிய முகாமில் சுமார் 120 மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் மூன்று சக்கர வாகனம், பொய் கால் , பொய் கை போன்றவை தேவைப்படுவோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர், மறுநாள் தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் வேளாளர் திருமன மண்டபத்தில் (20-06-2011) அன்று நடந்த முகாமில் சுமார் 110 பயனாளிகள் பங்கு பெற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர், அங்கு உபகரணம் தேவைப்படுவோர் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான உபகரணம் இன்னுமொரு மாதத்தில் வழங்க அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்ப்பாடு செய்துள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை ரீமாஸ் அரக்கட்டளை நிர்வாகிகள் நண்பர்கள் செந்தில் கணபதி , மருத்துவர் அன்பரசு, சதீஷ்குமார், குமார்பாண்டி,பிரபு,பாண்டியன் மற்றும் முழுமதி அறக்கட்டளை நிர்வாகிகள் அருள், பாலமுருகன், செயலாளர் மன்னை முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.