மன்னை முத்துக்குமார்
உண்மையான சமத்துவம் இந்த சுடுகாட்டுல... !



ஆமாங்க , இது சாதாரண சுடுகாடு இல்லை. திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி தாலுக்கா வை சேர்ந்த தலையாமங்கலம் என்ற ஊரில் இருக்கும் இந்த சுடுகாடு -ல மிகவும் பெருமை படக்கூடிய சம்பவம் பண்னெடுங்காலமாக நடக்குதுங்க. அது தாங்க நம்ம திராவிட இயக்க ஆண்டைகள் சொல்லளவில் பிதற்றும் சமத்துவம். இங்க யாரும் சொல்லாமலேயே என் பாட்டன் பூட்டன் காலம் தொட்டே நடைமுறையில் இருக்குது, அதாவது இந்த ஊரில் வாழும் தேவர், கோனார், அம்பலக்காரர் மற்றும் பஞ்சமர் அனைவருக்கும் ஒரே சுடுகாடு தான் . இதை சமீபத்தில் கேள்விப்பட்ட எனக்கு ஒரு சந்தேகம் வந்து என் ஐயாவிடம் கேட்டேன், அது வந்து ஒரே நேரத்தில் ஒரு பஞ்சமனும் கள்ளனும் இறக்க நேரிட்டால் என்ன செய்வார்கள் என்று. அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது , அப்படி ஒரு சமயம் தாழ்த்தப்பட்டவரும் கள்ளரும் இறக்க நேரிட்டப்போது இருவரையும் அருகருகே வைத்து ஒன்றாக எரித்தனர் என்றார். இதுவல்லவா சமத்துவ சமூகம் ?.

வாழ்க தலையாமங்கலம் மக்கள் ஒற்றுமை, வளர்க அவர்கள் புகழ்..