மன்னை முத்துக்குமார்
 எழுத்தாளர் திருமிகு ஜெயகாந்தனின் தீவிர வாசகன் என்ற முறையில் அவரது சிறுகதைகளை எனது வலைப்பூவில் பதிவதற்கு முன் அவரைப் பற்றியும் அவரது படைப்புக்களின் விவரமும் இங்கே..
ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு;

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லாமையால், தனது ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டில் இவர் நடத்தப் பட்ட விதம் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.அங்கு, அவரது மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர், ஜெயகாந்தனை கம்யூனிச வேதாந்தத்திற்க்கும், பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு பெரும்பாளான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகள் விற்றும் கழித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப் பட்டது.ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிப் புரிந்தார். இந்த எதிர்ப்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது - அவர் சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.இக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன.தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், 
ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார்.பின்னர் காமராசருடைய தீவிர தொண்டனாக மாறி, தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் துவங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாயின. இவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுதாளர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படமாக்கப் பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலாக உருப் பெற்றது...

படைப்புகள்;
* ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
* ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )

வாழ்க்கை வரலாறு;
* வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
* ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

நாவல்கள்  மற்றும் குறுநாவல்கள :
.* வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
* கைவிலங்கு (ஜனவரி 1961)

* யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
* பிரம்ம உபதேசம் (மே 1963)

* பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
* கருணையினால் அல்ல (நவம்பர் 1965)

* பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
* கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)

* சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)

* ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
* ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)

* கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
*ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)

* பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
* எங்கெங்கு காணினும்... (மே 1979)

* ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
* கரிக்கோடுகள் (ஜூலை 1979)

* மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
* ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்(டிசம்பர் 1979)

* ஒவ்வொரு கூரைக்கும் கீழே...(ஜனவரி 1980)
* பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)

* அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
* இந்த நேரத்தில் இவள்... (1980)

* காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
* காரு (ஏப்ரல் 1981)

* ஆயுத பூசை (மார்ச் 1982)
* சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)

* ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
* ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)

* இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
* இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)

* காற்று வெளியினிலே...(ஏப்ரல் 1984)
* கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)

* அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர்1985)
* இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)

* ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
* சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
.
சிறுகதைகள்;
-

* ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
* இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)

* தேவன் வருவாரா (1961)
* மாலை மயக்கம் (ஜனவரி 1962)

* யுகசந்தி (அக்டோபர் 1963)
* உண்மை சுடும் (செப்டம்பர் 1964)

* புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
* சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
* இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
* குருபீடம் (அக்டோபர் 1971)
* சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)

* புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
-
கட்டுரை;
-
* பாரதி பாடம்
* இமயத்துக்கு அப்பால்
-
திரைப்படமாக்கப்பட்டஇவர் கதைகள்;
-
* சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)

* ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
* உன்னைப் போல் ஒருவன்

* யாருக்காக அழுதான்*
-
ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்;
-
* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான்
-விருதுகள்;
-
* சாகித்யஅகாதெமிவிருது*
* 2002-ம் ஆண்டுக்கான ஞான பீடவிருது*
* 2009-ம் ஆண்டின் இலக்கியத் துறைக்கான பத்மபூஷன் விருது.