மன்னை முத்துக்குமார்


.
...........
..........
..ஆஆ............................

ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு                (2)
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தத்தத் தகதிமி தத்தத் தகதிமி
தத்தத் தகதிமி தோம்
தாகுத யுந்தரி தா
ததகுத யுந்தரி தை
தாகுத யுந்தரி ததகுத யுந்தரி தத்
ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம்
தா.

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறித்
தாமரைப் பூமீது வீழ்ந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில்
பரதம்தான் துளிர்விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

நாதிந்தின்னா நாதிந்தின்னா
நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தாதிகுதிகு தித்தாதிகுதிகு
தித்தாதிகுதிகு தித்தாதிகுதிகு
திக தானதான தா
திக தானதான தா
திக தானதான

சந்தனக்கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின் அழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
கலைநிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்தக்
கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன்
மதி தன்னில் கவி சேர்க்குது


சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம்...... நீ பாடு

சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு.....
 *
படம்: மைதிலி என்னைக் காதலி
பாடல் வரிகள் : டி. ராஜேந்தர்
இசை: டி. ராஜேந்தர்.
*