மன்னை முத்துக்குமார்

 பொய் எனத் தெரிந்தும்
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
*
நொடி நொடியாய்
 என் பொழுதை திருடும் 
உன் அழகை  ரசிக்க விடாமல் செய்யும் 
அந்த கொஞ்சநேர தூக்கத்தை 
 என்ன செய்ய ?
*

உண்மை தான்.
ஒரு போதும் என்னைப் புகழ்ந்து கவிபாட விடாமல்
உன்னை மட்டுமே புகழ்ந்து கவி படைக்கும் நான்
ஒரு ஆணாதிக்கவாதி தான்.
*
என்னை
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
*