மன்னை முத்துக்குமார்
கல்லூரி காலத்தில்
விடுதிக்கு வரும் நண்பனின் அப்பாவை
நண்பர்கள் உபசரிக்கும் போது
அன்பில் நெளியாத அப்பாவே இருக்க முடியாது !
*
இமயம் தொட்டாலும்
வாடா போடா தான்
நட்பில் !!
*
நட்பு !
அவன் அவரானது
கூச்சத்தையே தரும் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
----------
மன்னை முத்துக்குமார்
ஒரு ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டி இருந்தார். அன்று முதலை பற்றிய பாடம்.
முதலை ஆபத்தானது, கிட்டே சென்றால் கையை பிடித்து கடித்து விடும். சின்ன சின்ன விலங்கினங்களை உயிரோடு முழுங்கிவிடும் என்றார்.
உடனே மனிதர்களையுமா? டீச்சர் என்றாள்.
மனிதர்களை முதலைகளால் முழுங்க முடியாது அது உருவத்தில் பெரியது தான் ,
ஆனால் அதுக்கு மனிதனை முழுங்கும் அளவுக்கு வாய் பெரியது இல்லை. என்றார்
ஆசிரியை.
உடனே ஒரு மாணவி எழுந்து , இல்லை டீச்சர் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு மகேசை போன வாரம் முதலை முழுங்கிடுச்சி டீச்சர் என்றாள்.
இருக்கவே இருக்காது மனிதர்களை முதலையால் முழுங்கவே முடியாது என்று ஆணித்தரமாய் டீச்சர் சொல்லியும் மாணவி சமாதானமடையவில்லை.
”சரி டீச்சர், நான் சொர்க்கத்துக்கு போனப்பிறகு மகேசுக்கிட்டேயே கேட்டுக்குறேன் ”என்றாளாம்.
அதுக்கு டீச்சர், ஒரு வேளை மகேசு நரகத்துக்கு போயிருந்தா ? என்று கேட்டாராம்.
உடனே , அப்படின்னா நீங்க கேளுங்க என்றாளாம்.
இது எப்படி இருக்கு?
மன்னை முத்துக்குமார்
குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.
அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.
சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.
முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.
எங்களால் முடியவில்லை என்றனர்.
குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.
புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.
சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே
பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக
இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது
என்றார்.
# சரி தானே ?