மன்னை முத்துக்குமார்
விசுவநாதன் ஆனந்த் க்கு ரூபாய் 2 கோடி பரிசு : கொடுக்கட்டும் ...வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் . இந்த இளவழகி யை கண்டுக்காதது ஏன்?

'2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.
          
                                          திரு கிறிஸ்துதாஸ் காந்தி. இ.ஆ.ப
         
கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு. 
.
ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க... 
நான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு. 
.
திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.

அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''
-
 # அரசு திறமைக்கு மதிப்பளிப்பது இல்லை, வர்ணத்திற்க்கே என்பது இதன் மூலம்  தெளிவாகிறது. #
மன்னை முத்துக்குமார்

மனுசங்கடா !!!
நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!!

நாங்க மனுசங்கடா!!!
எங்களோட முதுகுக்கு என்ன இரும்புலத்தோலா......
உங்க இழுப்புக்கெல்லாம் பணியுரதே
எங்களின் கணக்கா

( மனுசங்கடா)

சதையும் எலும்பும் நீங்க வெச்ச
தீயில் வேவுது
உங்க சர்க்காரும் கோட்டும் அதுல
எண்ணைய ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு
அறிவிக்கிறீ ங்க - நாங்க
எரியும் போது...-நாங்க
எரியும் போது
எவன் மயிர புடுங்க போனீங்க?

(மனுசங்கடா)

ரத்தக் கறையத் தீக்க வந்த மனுசங்கடா.....
பழங்கட்டைஎல்லாம் வெட்டி எறியும் மனுசங்கடா...
நாங்க மனுசங்கடா

- இன்குலாப்
மன்னை முத்துக்குமார்
கம்யூனிசம் என்பது உற்பத்தி பொருள்களின் மீதான ஒரே பொது சொத்துடமை நிலவும் வர்க்கங்களற்ற சமூக அமைப்பே ஆகும்..
-

சோசலிசம் என்பது வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வுகளையும் பாலின ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவந்து மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையே சோசலிசம்.

மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
-
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
ஆனந்த விகடனில் தொடராக சி.மகேந்திரன் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ தொடரின் ஒரு பகுதியை அயல்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் குழு ஒன்று குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் நடத்தும் சித்திரவதையை அண்மையில் வேறு எந்தக் குறும்படமும் செய்ததில்லை. சிங்கள இனவெறி பயங்கரவாதத்தின் முகத்திரையை அகற்றிக் காட்டுகிறது இந்தக் குறும்படம்.



நன்றி-கீற்று இணையதளம்.
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்

-
பெண் : சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே (காடு
மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலைமை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…

மன்னை முத்துக்குமார்

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
---- டாக்டர் அம்பேத்கர்