பேராண்மை திரைப்படப்பாடல் --பொதுவுடைமை சமுதாயம் தொலைந்து போகவில்லை...
.
|
|
2007ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரனின் 50 ஆம் நினைவு வீரவணக்க ஆண்டாக ஒடுக்கப்பட்ட மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் மக்கள் எழுச்சியைக் கண்டு வெம்பிக் கொண்டிருந்த சாதிவெறிக் கூட்டம், அதே ஆண்டு அக்டோபரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை, தன் வன்மத்தை வெளிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டது.
நீறுபூத்த நெருப்பாகச் சாதிப் பகைமை எப்போதும் கனன்று கொண்டிருக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு வின்சென்ட் படுகொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் முதுகுளத்தூர் பகுதியில் மறவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத நிலையில், செப்டம்பர் 9 அன்று வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞர், முதுகுளத்தூரில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார். இவர் 2007ஆம்ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வின்சென்ட் மனைவியின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்புகள். செப்டம்பர் 11 அன்று நடக்கவிருந்த இம்மானுவேல் சேகரனின் 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க, சாதி வெறியர்களால் திட்டமிடப்பட்டதே இப்படுகொலை நிகழ்வு என்பதை, தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் உறுதி செய்தன.
பரமக்குடி நோக்கி அணிதிரண்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையில் காவல் துறையால் அடித்து நொறுக்கப்பட்டு, இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உசிலம்பட்டியில் இது போலவே, சாதி வெறியர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட தலித் மக்கள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாயினர். இதைக் கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்களின் மீது, காவல் துறையும் தன் பங்குக்கு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இத்தாக்குதல்களில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தலித் மக்கள் 29 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 70க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன.
அறிவழகன் படுகொலையைக் கண்டித்தும் அவரது உடலை வாங்க மறுத்தும், செப்டம்பர் 10 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் புரட்சிகர இயக்கங்களும் போராட்டம் நடத்தின. மாலை 5 மணிவரை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பசுபதி பாண்டியன், முருகவேல் ராஜன், அண்ணாமலை (மள்ளர் இலக்கியக் கழகம்), ஆற்றலரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), இளம்பரிதி (ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அறிவழகன் படுகொலைக்கு எவ்விதக் கண்டனமும் நிவாரணமும் அறிவிக்காத நிலையிலும், செப்டம்பர் 11 அன்று பல்வேறு இடங்களில் சாதி வெறியர்கள் மற்றும் காவல் துறையால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தும், செப்டம்பர் 24 அன்று மதுரை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. தியாகி இம்மானுவேல் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, மள்ளர் நிலம், தமிழர் விடுதலைப் புலிகள், தமிழ்ப் புலிகள், வன்கொடுமைக்கு எதிரான வழக்குரைஞர் மய்யம் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.
எந்வொரு ஒடுக்குமுறையையும் தம்மக்களின் விடுதலையை முன்னெடுக்க எதிர்கொள்வோம் என்ற சூளுரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கப்பட்டது. இம்மானுவேல் சேகரன் எனும் விதையிலிருந்து உருப்பெற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் அணையாது காக்கும் இத்தகைய எழுச்சியே, சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் நெருப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவ முள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மான மில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ்மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக , பண்டிகை , விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீயநாளாக , அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்துகொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லுாரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்லமுடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளையமுடியும்?
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருதவேண்டியிருக்கிறது?
ஙீ பூமி தட்டையா? உருண்டையா?ஙீ தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
ஙீ எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
ஙீ சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
ஙீ எங்கிருந்து தூக்குவது ?
ஙீ கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
ஙீ விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம்என்ன?
ஙீ அரக்கனைக் கொன்று பூமையை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
ஙீ பூமி மனித உருவா? மிருக உருவமா?
ஙீ மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளைஉண்டாகுமா?
ஙீ பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
ஙீ இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத் துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?
மாணவர்களே!
உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
-------தந்தை பெரியார்..