மன்னை முத்துக்குமார்

பெண் : சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்? 

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே (காடு
மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலைமை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…
***
மன்னை முத்துக்குமார்