மன்னை முத்துக்குமார்
சிகரெட் விற்று
சிறுக சிறுக சேமித்தார்
பெட்டிக்கடை க்காரர்
புற்றுநோயை !
*
 கேட்க மட்டுமே தெரிந்த காதுகளும்
பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும்
தேவைப்படுகின்றன !
*
 உருவ வழிபாடு இல்லையென்போருக்கும்
தேவைப்படுகிறது மத அடையாளம் !
*
 பெரிதாக வருத்தம் ஏதும் இல்லை போலும்
ஒற்றைச் சிலிர்ப்பில் இழப்பை சரிசெய்து விடுகிறது
இறகு உதிர்த்த அப்பறவை !
*
~ மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

எந்த வெளி நடப்பும் இல்லாமல்
தினம் தினம் மாலையில் கூடி பேசுகின்றன
வயல் வெளியில் காக்கைகள் !
*
மன்னை முத்துக்குமார்
பெண்ணியம் என்பது...

ஆண்களால் வகுத்து வைக்கப்பட்ட
அடிமைத்தனங்களை பண்பாட்டுக்கும் , கலாச்சாரத்துக்கும் ஊரு விழையாமல் எதிர்த்து நிற்பது !