மன்னை முத்துக்குமார்
கிரேக்க 'சாடிஸ' மன்னன் கலிக்யுலா - ஒரு பார்வை
-
-


'அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம்அடியோடு கெடுத்துவிடும்!'
-----------
பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு.
சில சமயங்களில் வக்கிரமான, கொடூரமான மிருகங்கள் 'அரசன்' என்றபெயரில் விரசம் புரிந்திருப்பதை வரலாறு நெடுக நம்மால் காண முடியும்!
'அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம்அடியோடு கெடுத்துவிடும்!' என்று ஆக்டன் பிரபு கூறிய பொன்மொழி உலகப்பிரசித்திப்பெற்றது.


ஆனால், சர்வாதிகாரிகள் 'அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் மிகமிகப்பரவசமானது' என்று அனுபவப்பூர்வமாக நம்பினார்கள். ரோம் சாம்ராஜ்யம்அழியக் காரணமாக இருந்தது இந்த அதிகார போதைதான்! இருப்பினும்,இன்றுவரை பல நாடுகள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத்தெரியவில்லை!


ஆகவேதான் 'வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம் -வரலாற்றிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே!'என்றார் ஒரு வரலாற்றாசிரியர்!


'இவன் எப்போது செத்து ஒழிவான்?' என்று நாட்டு மக்கள் ரகசியமாகப்பிரார்த்தனை செய்யும் அளவுக்கு வெறியாட்டம் போட்ட மன்னர்களும்நிறையப் பேர் உண்டு. அவர்களில் முன்னணியில் நிற்பவன், ரோம் நாட்டைஆண்ட கலிக்யூலா!


எந்தவொரு சர்வாதிகாரி இறக்கும்போதும், 'அப்பாடா' என்று நிம்மதிப்பெருமூச்சு விடும் மக்கள், அடுத்த கட்டத்தைப் பற்றி எச்சரிக்கையோடுசெயல்படாமல் ;தேமே'யென்று இருந்து விடுவது வரலாற்றின் விசித்திரமானசோகங்களில் ஒன்று.


ரோம் நாட்டை ஆண்டு வந்த மோசமான சர்வாதிகாரியான டைபீரியஸ் கி.பி. 37 -ல் செத்துப் போனவுடன், அடுத்தபடி யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பதுபற்றி மக்கள் கவலைப்படவில்லை! கலிக்யூலா என்ற பெயரில் மிகப்பெரியஆபத்து காத்திருப்பதை அவர்கள் சற்றும் உணராமல், டைபீரியஸ் மரணத்தைமகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தார்கள்!

கடைசிக் காலத்தில் டைபீரியஸ் வெறி பிடித்த கிழ அரசனாகஆகிப்போயிருந்தான். கொலைப்பயம் காரணமாகத் தனக்கென்று சிறுஅரண்மனையைக் கட்டிக்கொண்டு வெளியே தலைகாட்டாமல், உள்ளேசகலவிதமான செக்ஸ் வக்கிரங்களிலும் ஈடுபட்ட அவன், குறிப்பாகப் பச்சிளம்சிறுவர், சிறுமிகளையும் தன் காமப் பசிக்காக விதவிதமாகப் பயன்படுத்தஆரம்பித்தான். இதுகண்டு அவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களே கூடக்கடுப்பாகிப் போனார்கள்.

டைபீரியசுக்கு செக்ஸ் வக்கிரங்களில் அதீதக் கற்பனாசக்தி வேறு இருந்தது! 'ஸ்விம்மிங் பூல்' ஒன்றை உருவாக்கி, சிறுவர்களை மீன்வேடம் தரிக்கவைத்து,அதில் நீச்சலடிக்க வைப்பான் டைபீரியஸ். பிறகு தண்ணீருக்குள் இறங்கி,அங்கே சிறுவர்களுடன் விதவிதமான காம விளையாட்டுக்களில் ஈடுபடுவான்.

ஓரிரவு, டைபீரியஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய 'விசுவாசமான'நண்பன் ஒருவனே தலையணையால் மன்னன் முகத்தை மூடி, அதன்மீது ஏறிஅமர்ந்துகொள்ள, மூச்சுத் திணறிச் செத்துப்போனான் அந்த சர்வாதிகாரி!

இறப்பதற்கு முன்பு, முத்தாய்ப்பான ஒரு கொடிய காரியத்தைச் செய்யத்தவறவில்லை டைபீரியஸ். அது, தன் மருமகன் கலிக்யூலாவை அடுத்தவாரிசாக நியமித்தது!
''எனக்குப் பிறகு கலிக்யூலா ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் அத்தனைபேரும் 'டைபீரியஸ் எவ்வளவு நல்ல மன்னன்' என்று என்னைப்பாராட்டுவார்கள்!'' என்று வஞ்சகச் சிரிப்புடன் டைபீரியஸ் நெருக்கமானசிலரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு! டைபீரியஸ் சொன்னதுஉண்மையாகப் போனது ரோம் நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம்!

இத்தனைக்கும் 
ஜூலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன் கலிக்யூலா.அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன். 'கலிக்யூலா' என்பதுகூடப்புனைப்பெயர்தான். நிஜ முழுப்பெயர் கேயெஸ் சீசர் ஜெர்மானிக்ஸ்!


யுத்தங்கள் நடந்தபோதெல்லாம் ரோம் நாட்டு ராணுவ வீரர்களுடன் தானும்போவான் சிறுவன் ஜெர்மானிக்ஸ். ரத்தமும், கொலையும், சிதறிய உடல்களும்அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அப்போது ரோம் வீரர்கள் இந்தக் கிறுக்குப் பிடித்த குட்டி இளவரசனுக்கு,போர்வீரர்கள் அணிவது போலவே தனி 'பூட்ஸ்' தயாரித்துக் கொடுத்தார்கள். 'கரிகே' என்றால் இலத்தீனில் 'சிறிய பூட்ஸ்' என்று அர்த்தம். 'கலிக்யூலா' என்றுபெயர் வந்தது இப்படித்தான்!


செக்ஸ் விஷயத்தில் பிஞ்சிலே பழுத்தவன் கலிக்யூலா. முதன்முதலில்கலிக்யூலா 'காதல் வயப்பட்டது' அவனுடைய சொந்த சகோதரியிடம்! வக்கிரம்பிடித்த கலிக்யூலா, தன் மற்ற சகோதரிகளையும் விட்டுவைக்கவில்லை!


மக்களைப் பொறுத்தவரை, கலிக்யூலா ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்குவிடிவுகாலம் பிறந்துவிட்டதாகத் தப்புக்கணக்குப் போட்டு, அவன் பட்டம்கட்டிக்கொண்டதை அட்டகாசமாகக் கொண்டாடினார்கள்.


நகரத்தின் மையத்திலேயே ஒரு லட்சத்து அறுபதாயிரம் மாடுகள்வெட்டப்பட்டு, சாமானிய ரோமானியர்களுக்காக இலவச விருந்துதயாரிக்கப்பட்டது. கலிக்யூலா, ராணுவத் தளபதிகளை மறக்காமல்கூப்பிட்டனுப்பி, பொன்னும் பொருளும் வாரி வழங்கினான்.

மாமன் டைபீரியசின் இறுதி ஊர்வலத்தைப் பிரம்மாண்டமாக நடத்தியகலிக்யூலா, மக்கள் தந்த பதவியை வகிக்கத் தனக்குத் தகுதி உண்டா என்கிறரீதியில் சொற்பொழிவாற்றி, பாதி உரையில் கலங்கிக் கண்ணீர்விட்டு,மக்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் அழவைத்தான்!

கொடூரமான ஓநாய் விடுகிற முதலைக் கண்ணீர் அது என்பது புரியாத மக்கள்,அரண்மனைப் படிக்கட்டுகளில் இருந்து கிழே இறங்கிவந்த கலிக்யூலா மீதுபூமாரி பொழிந்து கரகோஷம் செய்தார்கள்.


'என்னுடைய பிரஜைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நகரத்தில்மக்கள் பொழுகுபோக்க, கலகலப்பான விஷயங்கள் குறைவாக இருக்கிறது.முதலில் இந்தக் குறையை நான் போக்க வேண்டும்' என்று அலுத்துக் கொண்டகலிக்யூலா, ராணுவத்தில் ஒரு பிரிவை உண்டாக்கினான். அந்த பிரிவின்வேலை - காடுகளுக்குச் சென்று சிங்கம், புலி, யானைகள், கரடிகளைச்சிறைப்படுத்திக் கொண்டு வருவது! அந்த மிருகங்களைப் பயன்படுத்தி,மக்களுக்காக சர்க்கஸ்களைத் துவக்கிய முதல் மன்னன் கலிக்யூலா தான்.ஆனால், அது கொடூரமான சர்க்கஸ்!

'ரியாலிடி டிவி'யைப் போல ஸ்டேடியத்துக்குள் கரடிகளையும்சிங்கங்களையும் விட்டு, வீரர்கள் ஈட்டிகளுடன் அவற்றைவேட்டையாடுவார்கள். சர்க்கஸ் முடிந்த பிறகு, மைதானத்துக்குள் மக்கள்இறங்கி ஓடிக் கும்மாளம் போடலாம்! அங்கே மது ஆறாக ஓடியது.விலைமாதுக்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடி, மக்களைக் குதூகலிக்கவைத்தார்கள்.

இந்தக் கலாட்டாவுக்கு நடுவே, திருமணமாகிப் போயிருந்த களிக்யூலாவின்மூன்று சகோதரிகளின் கணவன்களும் அடியாட்களால் அடித்துத் துரத்தப்பட்டு,சகோதரிகள் கலிக்யூலாவின் படுக்கை அறைக்குக் கொண்டு வரப்பட்டதைமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!கலிக்யூலா அவ்வப்போது மந்திரிப் பிரதானிகளைப் பார்த்து, 'நான்ஒருமுறை தலையசைத்தால் போதும். உடனே உங்கள் அத்தனை பேர்தலையும் கீழே உருளும். இது எப்படியிருக்கு?' என்று இகழ்ச்சியாகச்சொல்வது வழக்கம்!

ஒரு நாள் தர்பாரில் 'உங்கள் யாரிடமும் நான் அன்பை எதிர்பார்க்கவில்லை.என்னிடம் பயந்து நடுங்கினால், அதுவே எனக்குப் போதும்!' என்று கர்ஜித்தான்கலிக்யூலா. அதற்க்கேற்ப, அவன் எதைச் சொன்னாலும், செய்தாலும்மெளனமாக நிற்பதற்கு எல்லோருமே பழகிக்கொண்டார்கள்!

'சில சமயங்களில் சாமானியர்களைப் பார்த்தால், எனக்குப் பொறாமையாகஇருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகிறார்கள். வாழ்கையைஜாலியாக அனுபவிக்கிறார்கள். நான் அரண்மனைக்கு உள்ளேயேஇருந்துகொண்டு, உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது!' என்று ஒருமுறை அலுத்துக்கொண்ட கலிக்யூலா, தானும்இரவு நேரங்களில் 'நண்பர்களுடன்' சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு விஜயம்செய்து, அட்டகாசம் போட ஆரம்பித்தான்.

அதுபோதாதென்று கலிக்யூலா புதிதாக, ஏராளமான கேளிக்கை விடுதிகளைத்திறந்து வைத்தான். எல்லா கேளிக்கை விடுதிகளிலும் 'மன்னர் வருகிறாராமா?'என்று ஆவலோடு விசாரிக்க ஆரம்பித்தார்கள். பெண்களை நிர்வாணப்படுத்தி,எல்லோர் முன்னிலையிலும் உடலுறவு கொள்வது கலிக்யூலாவுக்குப்பிடித்தமான ஒன்று!


அவன் செயல்படும்போது மற்றவர்கள் சூழ்ந்து நின்று கரகோஷம் செய்வது,அந்த வெறி பிடித்தவனின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. திடீரென்று, 'இந்தக்கேளிக்கைக் கூடத்தில் வசதிகள் சரியாக இல்லை. விலைமாதுக்களின்ஒத்துழைப்பும் போதாது' என்று குற்றம் சாட்டி, இரவோடு இரவாக அந்தக்கட்டடங்களுக்கே தீ வைக்கச் சொல்வான் கலிக்யூலா!

'எல்லோரோடும் கலந்து பழகுகிறேன் என்பதால், என்னைச் சாதாரணமாகஎடுத்துக்கொண்டு விடக்கூடாது இல்லையா? எப்போதும் ஒரு பயம் இருக்கவேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படி!' என்று இதற்க்கு விஷமச் சிரிப்போடுகாரணம் சொல்வான் அவன். இதனால், கலிக்யூலா வருகிறான் என்றாலே,விசேஷமான வரவேற்பு ஏற்பாடுகள் அவசரமாக, நடுக்கத்துடன் நடக்கும்!


கி.பி. 38. அரியணையில் அமர்ந்து ஒரு வருடம் ஆனபோது, திடீரென்றுகலிக்யூலாவுக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் வீழ்ந்தான். 'மன்னர்பிழைப்பது சந்தேகம்' என்று நாட்டில் வதந்திகள் பரவின.பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்று, அரண்மனை வெளியேநின்று கலிக்யூலாவுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

யாரும் வேலைக்குச் செல்லாததால், தொடர்ந்து விடுமுறை! சர்ச்சுகள்,கேளிக்கைகள் எல்லாம் நின்று போனது. ஒரு வாரம் கழித்துச் சரேலென்றுபடுக்கையில் எழுந்து உட்கார்ந்த கலிக்யூலா, 'எனக்கு ஜுரமெல்லாம்வரவில்லை. மறுபிறவி எடுப்பதற்காகப் படுத்திருந்தேன். இப்போது மறுபிறவிஎடுத்து விட்டேன் - கடவுளாக!' என்று இரு கரங்களையும் உயர்த்தி கம்பீரமாகஅறிவித்தான்.

'சாத்தானாக!' என்று அவன் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்!ஏனெனில், அதற்குப் பிறகு பிறகு கலிக்யூலாவின் கொடூரம் பலமடங்குஅதிகமாகிவிட்டது!


தன்னைக் 'கடவுள்' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, கலிக்யூலாவின்கிறுக்குத்தனம் உச்சத்துக்குப் போய் விட்டது. 'மீண்டும் சர்க்கஸ்கேளிக்கைகளை இன்னும் கோலாகலமாக நடத்துங்கள்' என்றுஆணையிட்டான் அவன். எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சிங்கச்சண்டையையும் வீரர்களின் வாட்போரையும் பார்த்துக் கொண்டிருப்பது?போகப் போக மக்களுக்குப் போரடிக்க ஆரம்பித்தது!

கோலாகல வீண்செலவுகள் காரணமாக, கஜானாவில் பணம் கரையஆரம்பித்தது. சிங்கம், புலியோடு சண்டை போடும் வீரர்களுக்குச் சம்பளம்குறைக்கப்பட்டதால், பல வீர இளைஞர்கள் விலகிக்கொண்டார்கள்.கடைசியில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இறைச்சி வாங்கக்கூடப்பணமில்லை!

நாற்பதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஸ்டேடியத்தில், பட்டினி காரணமாகவத்தலாக மாறிய சிங்கங்களும் தொந்தியோடு கிழ வீரர்களும் அலுப்போடுமோதிக் கொள்வதைப் பார்த்த மக்கள் கிண்டலாக 'ஒழிக... ஒழிக!' என்று குரல்கொடுத்தார்கள்.இதைப் பார்த்து கலிக்யூலாவின் கண்கள் சிவந்தன.
உடனே மக்களைக் கலாட்டா பண்ணத் தூண்டிவிட்டதாகநூற்றுக்கணக்கானவர்கள் கைது செயப்பட்டார்கள். 'கூச்சல் போட்டஇவர்களுடைய நாக்குகளைத் துண்டியுங்கள். பிறகு, இவர்களைச்சிங்கங்களுக்கு இரையாக ஸ்டேடியத்துக்குள் தூக்கிப் போடுங்கள்!' என்றுஆணையிட்டான் மன்னன்.

நாக்குகள் அறுக்கப்பட்டு, ரத்த வாசனையுடன் மைதானத்தில்விடப்பட்டவர்களைப் பார்த்துச் சப்புக் கொட்டிய சிங்கங்கள், பசியோடுஅவர்கள்மீது பாய்ந்து குதறிக்கொன்று தின்றன. முதன்முறையாக மக்கள்திகைத்தது அப்போதுதான்!

'மிருகங்களுக்கு இறைச்சி வாங்கக்கூடப் பணமில்லை' என்றதற்கு, 'அதனாலென்ன... இறைச்சிதானே வேண்டும்? சிறையிலிருக்கும் கைதிகளைத்தினமும் மிருகங்களுக்குத் தீனியாகப் போடுங்கள்!' என்று ஐடியா தந்தான்கலிக்யூலா.


அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு அடியாட்கள்கடைவீதிகளில் இப்போது வசூல் செய்வதைப் போல, கலிக்யூலாவின்பிரத்தியேகக் குண்டர் படை, வியாபாரிகளையும் செல்வந்தர்களையும் மிரட்டிவசூல் செய்ய ஆரம்பித்தது. அவர்களை அனுப்பியதே கலிக்யூலாதான்!


ஒரு நாள் தளபதி ஒருவன், 'சிவப்பு விளக்குப் பகுதிகளில்கூட வசூல் செய்துவருகிறோமாக்கும்!' என்று மன்னனிடம் சொல்லித் தொலைக்க... திடீரென்றுகலிக்யூலாவின் முகம் குரூரமாக மலர்ந்தது. அன்றிரவு, தன் சகோதரிகளைக்கூப்பிட்டு அனுப்பினான் அவன்.

'நிதி நிலைமை மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். எனக்காகஎல்லோரும் அலைந்து உழைத்துப் பணம் வசூலித்து வர, நீங்கள் சும்மாசாப்பிட்டுவிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் அந்தபுரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவே, இனி உங்களுக்கும் வேலை தரப்போகிறேன்!'என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு உறுமிய அவன், 'இனி நீங்களும்பணக்கார விருந்தாளிகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும். அதற்குப் பணம்வசூலிக்கப் போகிறேன்...' என்றான்!


மறுநாள் அவசரமாக அவையைக் கூட்டி, இந்த வக்கிரமான திட்டத்தை அவன்அறிவிக்க... எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

ஆனால் கலிக்யூலாவோ 'என் சகோதரிகளை நீங்கள் அனுபவிக்கவேண்டுமானால், ஓரிரவுக்கு ஆயிரம் பொன் நாணயங்களை எனக்குத்தரவேண்டும். என் சகோதரிகள் ராஜவம்சத்தினர் அல்லவா!' என்றுகூச்சமில்லாமல் கட்டளை பிறப்பித்தான். 'ஒவ்வொரு இரவும் யாரெல்லாம்அந்தப்புரத்துக்கு வரவேண்டும்' என்ற பட்டியலையும் அவன் போட்டுக்கொடுத்து விட்டதால், அவன் அறிவிப்பு ஒரு கட்டாய ஆணையாகி விட்டது!


சில நாட்கள் கழித்து எல்லா வி.ஐ.பி-க்களையும் மீண்டும் அழைத்த கலிக்யூலா, 'இனி உங்கள் மனைவி, சகோதரிகள், மகள்களையும் அரண்மனைக்குஅழைத்து வரவேண்டும். இதை நீங்களாக சொல்வீர்கள் என்று பார்த்தால், 'கம்'மென்று இருக்கிறீர்கள்! யார் - யாருடன் இன்பமாக இருக்கலாம், அதற்கானதொகை எவ்வளவு எனக்குத் தரவேண்டும் என்பதெல்லாம் நாளைஅறிவிக்கப்படும்' என்றான் வெறிச் சிரிப்புடன்!

வயதான ஒரு அமைச்சர் மட்டும் மன்னனின் அருகில் வந்து நின்று, மிகுந்தநடுக்கத்துடனும் தயக்கத்துடனும் 'தங்களை நாட்டு மக்கள் எல்லோருமேரொம்பத் தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்று எனக்குக்கவலையாக இருக்கிறது. ஏனெனில், மன்னரை யாராவது மனதுக்குள் தவறாகநினைத்தால்கூட என்னால் தாங்க முடியாது' என்று குரலைத் தாழ்த்திச்சொன்னார்.


அவரைப் பரிதாபமாகப் பார்த்துப் புன்னகைத்த கலிக்யூலா, 'நான் கடவுள்என்பதை மறந்துவிட்டீர்கள். கடவுள் செய்வது எதுவும் பாவகாரியம் இல்லைஎன்கிற அடிப்படை விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே!' என்றுஎடுத்துச் சொன்னான்.

தான் 'கடவுளாக' மறுபிறவி எடுத்ததை அவையில் இருக்கும்முக்கியமான ஒருவரே மறந்துவிட்டாரே என்பதால், நாடெங்கும்அதற்காக விழா எடுக்கச் சொன்ன கலிக்யூலா, கூடவே தலைநகரில்இருந்த எல்லா (முந்தைய) மன்னர்கள் சிலைகளின் தலைகளையும்உடைத்து, கழுத்துக்குமேல் தன் தலையைச் சிலையாகத் தயாரித்துவைக்கச் சொல்லி ஆணையிட்டான்.
ரோம் நகரில் தலைவர்களுக்குச் சிலைகள் வைப்பது ரொம்ப காலபழக்கம் என்பதால், ஏராளமாக நின்றிருந்த சிலைகளை மாற்றியமைக்க,நிறைய சிற்பிகள் களத்தில் குதிக்கவேண்டி வந்தது! தலைநகரம்முழுவதும் உளி, சுத்தியல் சத்தங்கள் மயம்!

மறுநாள் அவை கூடியபோது கலிக்யூலா, 'எல்லா ஐடியாக்களையும் நானேதரவேண்டியிருக்கிறது. எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் பதவிகளில்மட்டும் கம்பீரமாக உட்கார உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?'என்று எகத்தாளமாகச் சீறிவிட்டு, உச்சக்கட்டமாகத் தான் மிகவும் செல்லமாகவளர்த்த 'இன்சிடேட்டஸ்' என்னும் குதிரையை அலங்காரம் செய்து,தர்பாருக்குக் கொண்டுவரச் சொன்னான்.

மீண்டும் அங்கே ஓர் அறிவிப்பு... 'உங்கள் எல்லோரையும்விட என் குதிரைபுத்திசாலி! ஆகவே, என் அருமை குதிரையை இன்றிலிருந்து கான்சல்பதவியில் அமர்த்துகிறேன்!'('கான்சல்' பதவி என்பது, நம்ம மத்திய காபினெட்அமைச்சருக்கு இணையானது!) என்று சொன்னான்.

இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான ஆட்சியாளனின் வாழ்க்கை நீண்ட காலம்நீடிக்கவில்லை.

கலிக்யூலாவுக்கு காஷியஸ் செயிரீயா என்பவன் பிரதான மெய்காவலனாகஇருந்தான். விசுவாசமாகப் பணிபுரிந்த அவனுடைய மனதில் வெறுப்புதுளிர்விட ஆரம்பித்தது. ஒரு நாள், செய்யாத குற்றத்துக்காக இளம்பணிப்பெண் ஒருத்தியை கலிக்யூலா இழுத்துவரச் செய்து சித்ரவதை செய்யச்சொன்னான்.


அரண்மனையில், சில வீரர்கள் மாறி மாறி அந்தப் பெண்ணைப் பாலியல்பலாத்காரப்படுத்தி, விதவிதமாகச் சித்ரவதை செய்தனர். அந்தப் பெண்ணுக்குநேர்ந்த கொடுமையையும் அவளுடைய கதறலையும் கெட்ட செயிரீயா,திடீரென்று மனமுடைந்து அழுதுவிட்டான்.

அன்றிலிருந்து கலிக்யூலா அவனைப் பார்க்கும்போதெல்லாம் 'அழுகிற பாப்பா'என்கிற ரீதியில் எல்லோர் முன்னிலையிலும் தொடர்ந்து கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தான். 'ஒவ்வொரு நாளும் உனக்கு இதுமாதிரி ஒரு பெயர்சூட்டப்போகிறேன்!' என்றும் கிண்டலடித்தான்.

கி.பி. 41 -ஆம் ஆண்டு,ஜனவரி மாதத்தின் ஓர் இரவு... சிறுவர்கள் நாடகம் ஒன்றுஅரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டது ( இதுபோன்றநாடகங்களிலிருந்துதான் சிறுவர்களைத் தன் காம விளையாட்டுகளுக்குத்தேர்ந்தெடுப்பான் கலிக்யூலா!).எல்லோரும் தயாரானவுடன் கலிக்யூலாவின்பிரத்தியேக அறைக்குள் நுழைந்த செயிரீயா, 'சிறுவர்கள் வந்துவிட்டனர்' என்றுபணிவோடு அறிவிக்க...

கலிக்யூலா ஆர்வமாக வெளியே வராண்டாவுக்கு வர, 'மன்னா! இன்று எனக்குத்தாங்கள் ஏதும் பெயர் வைக்கவில்லையே?' என்றான் செயிரீயா. பலமாகச்சிரித்த கலிக்யூலா, 'ஆமாம்! மறந்துவிட்டேன்... சரி, இன்று உன் பெயர் மிஸ்டர்.உள்பாவாடை (Petticoat)!' என்று சொல்லிவிட்டு நகர... இப்போதுசெயிரீயாவிடம் இருந்து சிரிப்பு வெளிப்பட்டது.

தன் உடைவாளைச் சரேலென்று உருவினான் அவன். திகைத்துப்போனகலிக்யூலாவின் முகம் வினாடியில் வெளிறிப் போக, தொடர்ந்து மன்னனின்உடலில் வாளைப் திரும்பத் திரும்பப் பாய்ச்ச... கலிக்யூலாவின் உடல் முழுதும்ரத்தத்தால் நனைய, ஒரு வழியாகக் கிழே விழுந்து இறந்தான் அந்தகொடுங்கோலன்.

அங்கிருந்து நேராக நாடக அரங்குக்குச் சென்று, மேடையில் ஏறி நின்றுசாவதானமாகச் சொன்னான் செயிரீயா - 'மன்னர் சில நிமிடங்களுக்கு முன்செத்துப் போய்விட்டார்!' அங்கே சற்று பயங்கரமான மௌனம் நிலவியது.பிறகு கரகோஷம் ஆரம்பித்தது. நிற்காத, நீண்ட, மகிழ்ச்சி நிரம்பியகரகோஷம்...
-

நன்றி: மதனின் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்', விகடன் பிரசுரம். மற்றும் இணையம்.
மன்னை முத்துக்குமார்

தமிழின் இனிமை.
-
-
பாடலை கேட்க சுட்டியை அழுத்தவும்.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

- புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்
மன்னை முத்துக்குமார்

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ ...
*.
பாடல் : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
படம் : அரசிளங்குமரி. 
படம் வெளியான ஆண்டு 1961.
மன்னை முத்துக்குமார்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
...இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா


*
-மக்கள் பாவலர் இன்குலாப்
மன்னை முத்துக்குமார்
.
வண்ணத்துப் பூச்சியை பிடித்து
முத்தமிட்டு பறக்கச் செய்து
அழகு பார்த்த அதே மனசு தான் ;

ஓணானை பிடித்து
புகையிலை திணித்து ஆடவும் செய்தது !

எல்லாம் நிறைந்தது
குழந்தை பருவம்.

எது சரி , எது தவறென புரிந்த பின்
ஏனோ வாழவும் மறந்து போனோம் !

-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
முடியும் என்பது மூலதனம்.!
முடியாது என்பது கோழைதனம் !

மன்னை முத்துக்குமார்
நான் தான் இறுதி
முடிவெடுக்கிறேன் ;
என்ற ஒரே காரணத்தினால்
எனது எந்த தவறையும்
நியாயப்படுத்திவிட முடியும்
என்ற எனது நம்பிக்கை
வெளியில் வெல்லப்படலாம்.
உள்ளுக்குள் எப்போதும்
ஒரு குற்றவாளி தான் நான் !
*
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
இயக்குனர், ஒளி ஓவியர் திரு பாலுமகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள்...;-)
மன்னை முத்துக்குமார்

" நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை”
 ~~
 உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்”
 ~~
 ‘ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
~~
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ,யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ.அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
~~
–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.

 

மன்னை முத்துக்குமார்
 கேளடா மானிடவா மண்ணில் கீழோர் மேலோர் இல்லை.

-

-பாரதியின் பாடலை கேட்க மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.
மன்னை முத்துக்குமார்
 எனக்கு பிடித்த பாடல்.
-
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ
காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ
கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ
எதுவுமே... எதுவுமே... எதுவுமே..
எதுவுமே நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்
இதுவரை விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர்கதை
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான்
கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்....
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரைப்போல் நீளலாம்
உனக்கு நான் பிறந்தவள்
மனமெனும் கதவைத்தான் திறந்தவள்
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

படம் : நள தமய்ந்தி
இசை : ரமேஷ் விநாயகம்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி
-
பாடலை கேட்க கீழே சொடுக்கவும்.
-
.
மன்னை முத்துக்குமார்

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லைநாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜிபீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும்

உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல்பண்டைய இந்தியாவின் வர்த்தகம்என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வுஎன்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினைஎன்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும்இரட்டை வாக்குரிமைதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையேபுனா ஒப்பந்தம்ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்

 சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.  காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன.

இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.