மன்னை முத்துக்குமார்
-
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
ஆனந்த விகடனில் தொடராக சி.மகேந்திரன் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ தொடரின் ஒரு பகுதியை அயல்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் குழு ஒன்று குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் நடத்தும் சித்திரவதையை அண்மையில் வேறு எந்தக் குறும்படமும் செய்ததில்லை. சிங்கள இனவெறி பயங்கரவாதத்தின் முகத்திரையை அகற்றிக் காட்டுகிறது இந்தக் குறும்படம்.



நன்றி-கீற்று இணையதளம்.
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்

-
பெண் : சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே (காடு
மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலைமை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…

மன்னை முத்துக்குமார்

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
---- டாக்டர் அம்பேத்கர்
மன்னை முத்துக்குமார்


"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
..

-பாரதிதாசன்

மன்னை முத்துக்குமார்
நாடாளுமன்ற ஜனநாயகத்தினாலோ, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினாலோ, ஆயுதப் புரட்சியினாலோ, வேறு எவ்வகைத் தத்துவங்களாலோகூட, சாதியை வேரறுக்க முடியாது.

ஏனெனில்,

இது அடிப்படையில் சமூக - மத - பண்பாட்டுப் பிரச்சினை. எத்தகைய சமத்துவ, ஜனநாயக, சோசலிச குடியரசை நிர்மாணிக்க முனைந்தாலும், அதற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிக்கப்பட வேண்டும்.

-டாக்டர் அம்பேத்கர்
மன்னை முத்துக்குமார்
இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார்.

சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது.


சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.

அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.

இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)
நன்றி : தலித் முரசு மே2009

மன்னை முத்துக்குமார்
தொழில் துறையில் நம்பர் ஒன், கல்வியில் நம்பர் ஒன், தகவல் தொழிநுட்ப பூங்கா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இப்படி எதை வேண்டுமானாலும் பெருமை பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அதற்கு முன் இதற்கு வழி சொல்லுங்க,

இந்த இரட்டை குவளை முறை தமிழ்நாட்டில் இருப்பது ஆளும் ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியாது என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ள எந்த சுப்பனும் இங்கே தயார் இல்லை, காரணம் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த உளவு படையை காட்டிலும் இப்போது இருக்கும் உளவு படை சிறப்பானது. திறம்பட செயல்படவும் செய்கிறது , தமிழ் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குற்ற செயலையும் தடயவியல் கொண்டு 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் இந்த அரசுக்கு இரட்டை குவளை முறை மட்டும் கண்ணுக்கு புலப்படாமல் போனது எங்கனம்? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறீகளா? அல்லது சாதி மத ஏற்ற தாழ்வுகள் இந்த நாட்டின் கேடு நமக்கு என்ன என்று இருக்கிறீகளா? இது தான் பெரியார் வழி வந்த பகுத்தறிவாளரின் அறிவார்ந்த ஆட்சிக்கு அழகா? எது எப்படியோ நாங்க இங்கே ஊர் பெயர் , டீ கடை பெயர் , என்று இந்த அரசுக்கு இது வரை தெரியாத அனைத்து விவரங்களையும் இங்கே கொடுத்து உள்ளோம் இனியாவது என்ன முடிவு எடுக்கிறீகள் என்று பார்க்கலாம்.

ஒட்டன் சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றி இரட்டைக் குவளைகளை வைத்துள்ள தேனீர்க் கடைகள் தீண்டாமை பின்பற்றும் கோயில்கள், சுடுகாடுகளின் முதல் பட்டியலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 15 இதழில் வெளியிடப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றும் வணிக நிறுவனங்களின் இரண்டாவது பட்டியல் இங்கு வெளியிடப்படுகிறது.

ஒட்டன் சத்திரம் ஒன்றியம்: ஆமாங்க நம்ம சட்டமன்ற கொறடா வின் சொந்த தொகுதிதான்

பெருமாள் கோவில் வலசு, கள்ளி மந்தயம்

1. மல்லீசுவரன் தேனீர் கடை
2. காளியப்பன் தேனீர் கடை.
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அப்பியம்பட்டி நால்ரோடு, கள்ளி மந்தயம்
1. திருமலைச்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, முருகன் சலூனில் முடிவெட்டத் தடை, சுடுகாடு இரண்டு.
2. தியாகராசன் தேனீர் கடை
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

பிச்சைக்கல்பட்டி – மார்க்கம் பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.
சிந்தலப்பட்டி
1. சின்னத்தாயி தேனீர் கடை
2. மயில்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, காளி யம்மன், முத்தாலம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை.

சின்னக்கரட்டுப்பட்டி
ராமர் கோவிலில் அனுமதி இல்லை, சுடுகாடு இரண்டு.
பெரியகரட்டுப்பட்டி
நாயக்கர் தெருவில் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அரசப்ப பிள்ளைபட்டி
1. பெரியசாமி தேனீர் கடை
2. மல்லிகா தேனீர் கடை
3. இரவி தேனீர் கடை
காளியம்மன் கோவில் விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என் பதால் அரசு வழங்கியுள்ள மேசை நாற்காலியை அப்புறப்படுத்திவிட் டார்கள். சாதி இந்துவான அஞ்சல கரும், தலித் ஊழியர் நாற்காலியில் அமரக் கூடாது என்பதற்காக தானும் தரையில் உட்கார்ந்து பணிபுரிகிறார்.

சாமியார்புதூர்
1. இராமசாமி தேனீர் கடை
2. முருகேசன் தேனீர் கடை
3. சின்னதம்பி தேனீர் கடை
4. நல்லதம்பி தேனீர் கடை
5. கருப்பையா தேனீர் கடை
6. கருப்புச்சாமி தேனீர் கடை
ஆகிய கடைகளில் இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு மூன்று.
குத்திலிப்பை
1. சின்னச்சாமி தேனீர் கடை
2. சுப்பிரமணி தேனீர் கடை
3. பெரியசாமி முதலியார் தேனீர் கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு, தேநீர் கடையில் தண்ணீர் பானை இரண்டு. துர்க்கையம்மன் கோவிலில் அனுமதி இல்லை. (இது பழனி தேவஸ்தான கோவில்)

கலையரங்கில் அமர அனுமதி இல்லை. பேருந்து நிலையத்தில் அமர அனுமதி இல்லை. இங்குள்ள அஞ்சலகத்தில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலி யில் அமர அனுமதி இல்லை. தரையில்தான் கோணிப் பையில் அமரவேண்டும்.
சின்னக்காம்பட்டி

காளியம்மன்கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. இங்கும் கிளை அஞ்சலகததில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலியில் அமர அனுமதி இல்லை. தரையில் கோணிப் பையில்தான் அமரவேண்டும்.
எல்லப்பட்டி – மார்க்கம்பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை.
மாம்பாறை – மார்க்கம்பட்டி
முனியப்பன் கோவில் (இதுதான் இந்தப் பகுதியிலுள்ள கொங்கு இனத்தைச் சார்ந்த கவுண்டர்கள் கந்து வட்டி தொழில் செய்வதற்கு அனுகூலமான கடவுளாகக் கருதப் படுகிறது. தமிழகம் முழுதுமுள்ள (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்), இந்தியா முழுதும் உள்ள கந்து வட்டிக் கடைக்காரர்கள் இங்கு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். நாத்திகர்களாக உள்ள கந்துவட்டி கவுண்டர்கள்கூட இங்கு நேர்த்திக் கடன் செலுத்து கிறார்கள்.)
இங்கு தலித்துகளுக்கு தனி மண்டபம். தலித்துகள் கவுண்டர் வெட்டும் கிடாய் விருந்தில் அனுமதி இல்லை. அப்படி வந்தாலும் அவர் களுக்கு உணவு வெறும் தரையில் தான். அதுவும் தனியாகத்தான். இங்கு தலித்துகளுக்கு விபூதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக மண்தான் வழங்கப்படு கிறது. இந்தக் கோவிலில் மட்டும் எந்தக் காலத்திலும் மதுவிலக்கு கிடையாது.
மார்க்கம்பட்டி
காளியம்மன், முத்தாலம்மன், விநாயகர்கோவில்களில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. தலித்துகள் இங்குள்ள ஓடையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மழை காலங் களில் ஓடைகளில் தண்ணீர் வந்தா லும் அதில்தான் அடக்கம் செய்யப் படுகிறார்கள்.

ஓடைப்பட்டி – அம்பிளிக்கை
இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என்பதால் தரையில்தான் உட்கார்ந்து பணி புரிகிறார்.
1. பொன்னையன் முதலியார் டீ கடை
2. செங்கோடன் டீ கடை
3. செல்லமத்து டீ கடை
4. செல்வி டீ கடை
5. அத்திக்கோம்பைக்காரர் டீ கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு. காளி யம்மன், முத்தாலம்மன், பகவதி யம்மன், பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கலைரயரங்கில் தலித்துகள் அமர அனுமதி இல்லை.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தி எதிரொலி
தலித் அஞ்சலக ஊழியருக்கு நாற்காலி மேசை வந்தது

ஒட்டன்சத்திரம், சேலம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேனீர்க் கடைகள், சுடுகாடுகள், முடிதிருத்தும் நிலையங்கள், கோயில்களில் நிலவும் தீண்டாமைகளை பட்டியலாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகு, உறங்கிய காவல்துறை விழித்துக் கொண்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள வெரியப்பூர் கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அஞ்சல் ஊழியர், ஆதிக்கசாதி அதிகாரியுடன் சமமாக உட்காரக் கூடாது என்பதால் மேசை நாற்காலி வழங்காமல் தரையில் உட்கார வைத்து வேலை வாங்கி வருவதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சுட்டிக்காட்டியது.

காவல்துறையின் சென்னை நகர இணை ஆணையாளரான இரவி, அய்.பி.எஸ். அவர்களின் சொந்த கிராமம் இது. செய்தியைப் படித்த அதிகாரி இரவி, வெரியப்பூரில் உள்ள தனது தந்தையார் முத்துச்சாமி அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியுள்ளார். முத்துச்சாமி அவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக பணியாற்றியவர். அவர் வெரியப்பூர் அஞ்சலகம் சென்று, நேரில் பார்வையிட்டு தரையில் தலித் அஞ்சல் ஊழியர் உட்கார வைக்கப்பட்டுள்ள அவலத்தை நிறுத்துமாறு கேட்டதாக தெரிகிறது.

இப்போது தலித் அஞ்சலக ஊழியருக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டு, அதில் அமர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்ற அனைத்து தேனீர்க்கடைகளுக்கும், காவல்துறையினர் நேரில் சென்று, இரட்டைக் குவளைகளை அகற்றுமாறு எச்சரிக்கை செய்து வருகிறார்கள். பார்ப்போம் என்ன நடக்குது என்று….

தொடரும் …
நன்றி -பெரியார் திராவிடர் கழகம்

மன்னை முத்துக்குமார்

மாண்புமிகு உச்ச நீதிமன்றம், புது டில்லி
நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு & கியான் சுதா மிஸ்ரா
மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011

ஆறுமுகம் சேர்வை & அஜித் குமார் ........ மேல்முறையீட்டாளர்கள்
எதிர்
தமிழ்நாடு அரசு ......... எதிர் மனுதாரர்

தீர்ப்புரை

“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி

“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். - அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776

1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

2.அனுமதி அளிக்கப்பட்டது.

3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.

5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.

6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.

7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.


8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.

9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.

10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.

12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.

13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.

22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.

23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.

24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."
14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.

17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.


நன்றி : கீற்று வழியாக இராபர்ட் சந்திரகுமார்-சபிதா

மன்னை முத்துக்குமார்
ஒடுக்கப்பட்ட கலை இனி சபை ஏறும் காலம், ஆமாம் இன்று முற்ப்போக்காளர்கள் தங்கள் அனைத்து வித விழாக்களுக்கும் முன் நிகழ்வாக இந்த பறை ஆட்டத்தை நடத்துவது எல்லா இடங்களிலும் காணப்படுகிறது..வரவேற்க்கபட வேண்டியதும் கூட....

மன்னை முத்துக்குமார்

சம கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர்களில் ஒருவரான கவிஞர் குட்டி ரேவதியின் சர்ச்சைக்குரியத் தலைப்பினை கொண்ட நூல் வெளியீடு 06-01-2012 அன்று சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடந்தது.

நூலினைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் கார்ல் மார்க்ஸ்- ல் தொடங்கி மகாகவி பாரதி, சதிக்கு சாவு மணி அடித்து விரட்டிய ராஜாராம் மோகன்ராய் அதன் பின்னர் புரட்சி கவிஞர் பாரதி தாசனில் நின்று இன்றைய முற்போக்கு பார்வையை கொண்ட அண்ணன் அறிவுமதி அனைவரும் வலியுறுத்தும் பெண் விடுதலை தான். ...

அவர்கள் சொன்ன போது சொன்ன விதம் யாருக்கும் சலிப்பையோ வெறுப்பையோ ஏற்படுத்தியதில்லை. அதனாலென்னவோ அவர்கள் கூற்றில் பொதுவுடமைவாதிகளும் முற்ப்போக்காளர்களுக்கும் உடன்பாடு உண்டு என்ற போதிலும் சமூகத்தில் பெரிய மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை...

ஒருவேளை கவிஞர் குட்டி ரேவதி அந்த தளம் ஏற்ப்படுத்தாத தாக்கத்தை , தனது சமூகம் மீதான கோபத்தை இப்படி காட்ட நேரிட்டதோ என்று என்ன தோன்றுகிறது.

தலைப்பு இது தாங்க ஆண்குறி மையபுனைவைச் சிதைத்த பிரதிகள்.

இதில் குட்டி ரேவதி தனது சமகால பெண் எழுத்தாளர்களையும் அவர்கள் படைப்புக்களையும் கோர்வையாக்கியுள்ளது நூலுக்கு அழகு.

விழாவில் எழுத்தாளரும் புதிய தலைமுறை வார இதழில் பணிபுரிபவருமான கவிஞர் தமயந்தி பேச்சில் பெண்ணுலகம் சந்திக்கும் ஒட்டுமொத்த அடக்குமுறைகளும் கணலாக தெரித்தது...

இந்நுலை அனைவரும் படிக்க வேண்டும் அதோடு நிற்க்காமல் சமூகத்திற்கு நாம் எந்த அளவில் மாற்றம் செய்யலாம் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றினால் அது இந்நூலின் வெற்றி! படித்த உடன் மனம் கணக்கும் என்பதும் உறுதி.
மன்னை முத்துக்குமார்

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!