மன்னை முத்துக்குமார்
 தமிழில் தனக்கான , யாரும் தொட முடியாத ஒரு இடத்தை எடுத்துக்கொண்ட இயக்குனர் திரு . மகேந்திரன் அவர்களின் பூட்டாத பூட்டுக்கள் திரைப்படம் .
-
மன்னை முத்துக்குமார்
ஆதரவற்ற
முதியோர் இல்லத்தை
கடந்து செல்லும்
ஒவ்வொறு முறையும்

குற்ற உணர்வுடன்
குருகித்தான்
போகிறது மனசு;

பிடிச்சோறு
கொடுத்து வளர்த்த
அம்மாவையும் ,

நிலாச்சோறு ஊட்டி
வளர்த்த பாட்டியையும்

நிர்கதியாய் விட்டுவிட்டு
வீட்டோடு
மாப்பிள்ளையாகிப் போன
எவறுக்கும் !
-
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
இயக்குனர் பாலுமகேந்திரா வின்  இரண்டு திரைப்படங்கள் என்னை மிகவும் வசீகரித்தவை, அவை ஒன்று  வீடு , மற்றொன்று சந்தியா ராகம்.

இங்கே  “ சந்தியா ராகம்” - படத்தின் யூ- ட்யூப் லின்ங் உள்ளது , பார்த்து சொல்லுங்க.
 1

-
2

-
3

-
4
மன்னை முத்துக்குமார்

தூசு படிந்த காற்றை
தன் இலைகளால்
தட்டி விரட்டி
தூய காற்றையும்
வெயிலின் உக்கிரத்தை
தன்னகத்தே தாங்கி கொண்டு
குளுமையை மட்டும் கொடுத்த
மரத்தின் மதிப்பை
அது எத்தனை விலைபெறும்
என்று கணக்கிடுவதும்
பெற்றோரை முதியோர் இல்லம்
அனுப்பி வைப்பதும் ஒன்றே



-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
-
-
எங்கள் அப்பா
எங்கள் அப்பா
அப்பா
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!

என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!

எங்கள் என்பது…
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!

ஆம்…அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
‘ஆண் தாய்’
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்…

நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்!

நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!

உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்…
இது
யார்க்
குற்றம்!

என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!

உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க

உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!

பதில்
சொல்லுங்கள் !

--
  - பாவலர் அறிவுமதி
மன்னை முத்துக்குமார்

-
பாடலை கேட்க மேலே உள்ள லின்ங் கை  சொடுக்கவும்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!

நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே.......

குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!

இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்! 
-
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
மன்னை முத்துக்குமார்
.

மன்னை முத்துக்குமார்
-
மன்னை முத்துக்குமார்
எனக்கு பிடித்த ”மெட்டி” தமிழ்த் திரைப்படம்.
-
மன்னை முத்துக்குமார்

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர் .

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் -ஜெயகாந்தன்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு - லெனின்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே. -லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது - டிக்கன்ஸ்

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்.
----------
உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..;-)
                                    ----அன்புடன் உங்கள் மன்னை.----
மன்னை முத்துக்குமார்

கப்பற்ப்படை
காலாட்படை,
விமானப் படை
என்பதெல்லாம் தாண்டி
கரும்புலி கொண்ட
வீரப் பரம்பரையடா நீ..!

உனது இனப்பற்றை காட்ட,
அநியாயத்துக்கெதிரான
உனது கோபத்தை காட்ட,
உனது ஆற்றாமையை காட்ட ,
தற்கொலைகள் சரியாகாது.

தமிழா ..நீ பாசக்காரன் தான் ,
கோபக்காரன் தான் , 

அவையெல்லாம் தற்கொலை என்ற
கோழைத்தனத்துக்கும் முன்
மண்டியிடச் செய்திடாதே.

கொடியோர் செயல் அற
கத்தியையையும் தீட்டு அதோடு உன்
புத்தியையும் தீட்டு .

தமிழனின் வீரம் தரணியெங்கும்
தலை நிமிரும் நேரம்
தற்கொலைகளால் அதை
தரம் கெட செய்திடலாமோ ?

தமிழா தற்கொலை தவிர்த்து
தரணியில் உன் தலை நிமிர்த்து !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
  Best CINEMATOGRAPHY Award Winning Documentary film 2012
-
மன்னை முத்துக்குமார்
உன்னைப் போய்
தப்பா நினைச்சிட்டேனே ?

என்பது

என்
தகுதிக்கு
மீறிய
புகழ்ச்சி !

என்ன வேண்டும்
உனக்கு ?
---
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
என்னைப் பேட்டிக் காண
என்ன இருக்கிறது ? என்றேன்.

உங்கள் பெருமையை
ஊரறியும் ஐயா , என்றவன்

பேட்டியைத்
தொடங்கிக் கேட்டான்,

உங்களைப் பற்றிச்
சொல்லுங்க ஐயா  !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
தாலாட்டு
தூங்குவதற்குத் தான்.
சேயுடன் தாயும் !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

நீதிமன்றம் !

உண்மையை
உரக்கச் சொல்லி
உணர்த்தவும்

அதனால்
உணர்ந்து
கொள்ளவும் தான்.

மற்றபடி
குற்றவாளிக்கு
தன்
குற்றம்
புரியாமலில்லை !
-
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
பிறப்பதற்கே
துணிந்தவன்
நீ ..!

இடையில்
என்ன ..

துட்சம் தான்
  எல்லாம் 
உனக்கு !
மன்னை முத்துக்குமார்
வார்த்தைகளால்
வளமையை,
வலியை,
மகிழ்வை,
காதலை,
அன்பை,
வெளிபடுத்தும்
ஆயுதமே
கவிதை !
-
- மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
உண்மையென்று
ஒன்றிருக்க..

ஒவ்வொறு நாளும்
நடிக்கிறோம் அல்லது
நகர்கிறோம்
நீதிமானாய்
நியாயவாதியாய்
நல்லவனாய்
இன்னும் பலவாய்..

அதுவதுவாய்
அதுவதற்க்கேற்றாற் போல்
நம்மை நாமே
பாத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

உண்மை என்பது
எல்லோருக்கும்
ஒரே மாதிரியாய் இருப்பதால்
அதுவே யதார்தமாகி விடுகிறது.

எளிதில் தப்பி விடுகிறோம் அல்லது
தப்பித்துக் கொள்கிறோம்.

 -
-மன்னை முத்துக்குமார்