மன்னை முத்துக்குமார்

தூசு படிந்த காற்றை
தன் இலைகளால்
தட்டி விரட்டி
தூய காற்றையும்
வெயிலின் உக்கிரத்தை
தன்னகத்தே தாங்கி கொண்டு
குளுமையை மட்டும் கொடுத்த
மரத்தின் மதிப்பை
அது எத்தனை விலைபெறும்
என்று கணக்கிடுவதும்
பெற்றோரை முதியோர் இல்லம்
அனுப்பி வைப்பதும் ஒன்றே



-மன்னை முத்துக்குமார்.