மன்னை முத்துக்குமார்
உண்மையென்று
ஒன்றிருக்க..

ஒவ்வொறு நாளும்
நடிக்கிறோம் அல்லது
நகர்கிறோம்
நீதிமானாய்
நியாயவாதியாய்
நல்லவனாய்
இன்னும் பலவாய்..

அதுவதுவாய்
அதுவதற்க்கேற்றாற் போல்
நம்மை நாமே
பாத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

உண்மை என்பது
எல்லோருக்கும்
ஒரே மாதிரியாய் இருப்பதால்
அதுவே யதார்தமாகி விடுகிறது.

எளிதில் தப்பி விடுகிறோம் அல்லது
தப்பித்துக் கொள்கிறோம்.

 -
-மன்னை முத்துக்குமார்