மன்னை முத்துக்குமார்
புரட்சிக்கவிஞருக்கு இன்று (29-04-2010) 120 வது பிறந்த நாள்..அவரது பாக்கள் என்றும் அறியாமையை அகற்றும் ஒளிச்சுடர், பகுத்தறிவு போர்வாள்..அவரது புகழ் தமிழுலகம் என்றும் போற்றும்..பார்ப்பனிய அறிவு சூழ்ச்சியை தனது பாடல்களால் தமிழனுக்கு எடுத்து உரைத்த அவரது தொண்டு என்பது ஒவ்வொறு தமிழனும் மறக்க கூடாதது நன்றிக் கடனுக்குரியது, பின்பற்ற வேண்டியது...
-
கொலைவாளினை எடடா!
--------------------------------------
---------------------------------------------------------
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!

நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!


அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே.......

குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!


தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!

இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!


---