மன்னை முத்துக்குமார்
மேலிமைக்கும்
கீழிமைக்கும்
இடைப்பட்ட
தூரம் தான்
துக்கமென்பது.
மூடிய
இமைகள்
திறக்கவும்
செய்யும் !
●
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
குழந்தைகள்
ஒரு பொழுதும்
தன் கோபத்தை
பொம்மைகளிடம்
காட்டியது இல்லை
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
குழந்தைகள்
கேட்கும்
எல்லா
கேள்விகளுக்கும்
பதில் சொல்லும்
அப்பாவோ ,
அம்மாவோ
இன்னும்
பிறக்கவில்லை.
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அன்னக்கொடியும் கொடிவீரனும் ..
எனையாளும் ஆளுமை பாரதிராஜாவின் “ அன்னக்கொடியும் கொடிவீரனும்”
படத்தில்
அண்ணன் அறிவுமதி யின் ..
பொத்தி வச்ச ஆசை தான் ...கீழே க்ளிக் செய்து கேளுங்க
.
மன்னை முத்துக்குமார்
எத்தனையோ
அநீதிகள்
பழக்கத்தால்
நீதிகளாய்
பரிமளிக்கின்றன
வரதட்சணையைப் போல !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அரசியல்வாதிகளின் / சினிமாக்காரர்களின் திடீர்
ஈழ கரிசனத்தை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் இந்த கவிதை தான் எனக்கு
ஞாபகம் வருகிறது.
போரும் சிறிய நாடுகளும் :
--
விளைநிலம் ஒன்றில்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..
கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..
கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..
எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..
ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
"பார்த்தாயா குழந்தாய்..
எத்தனை விநோதம் இது?
இவ்விரு பெரிய பறவைகளுக்கும்
விரிந்து பரந்த இந்த காயம்
போதவில்லையோ?
இப்படி ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொள்கிறார்களே..!
சிறகு முளைத்த அந்த
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் ஏற்படட்டும் என்று
இதயபூர்வமாய் நீ
இறைவனை வேண்டிக் கொள்..!!"
குட்டியும் அவ்வாறே
வேண்டிக் கொண்டது..!!
-
-கலீல் கிப்ரான்
மன்னை முத்துக்குமார்
இங்கு மிகச் சிறந்த ஒழுக்கமாய் இருக்கும் ஒரு நற்குணம்
மற்றொறு உலகத்தில் மிக தாழ்ந்ததாய் இருக்க கூடும்.
--கலீல் ஜிப்ரான்,
மன்னை முத்துக்குமார்
திட்டமிட தவறினால்
நாம்
தவறு செய்யத் திட்டமிடுகிறோம்
என்று பொருள் !