மன்னை முத்துக்குமார்
 
”தேனீ “ கிட்ட ஒரு பறவை , இவ்வளவு கடின உழைப்பால் நீ சேமிக்கும் தேனை மனிதர்கள் திருடிட்டு போயிடுறாங்களே அதுக்காக நீ வருந்த மாட்டியா?  என்றது.

அதற்கு ,தேனீ நான் ஏன் வருந்த வேண்டும்? நான் சேமிக்கும் தேனை வேண்டுமானால் மனிதர்கள் திருடிச் செல்ல முடியும், ஆனால் ஒரு போதும் பூவிலிருந்து தேனை எடுத்துச் சேமிக்கும் கலையை அவர்களால் திருட முடியாது , என்றதாம்.