மன்னை முத்துக்குமார்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன் அமைச்சரிடம் படித்துக் காட்டினான். அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான மொக்கை கவிதைகள் உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார். 

மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.

சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.

”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.