மன்னை முத்துக்குமார்

ஒரு ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டி இருந்தார். அன்று முதலை பற்றிய பாடம்.
முதலை ஆபத்தானது, கிட்டே சென்றால் கையை பிடித்து கடித்து விடும். சின்ன சின்ன விலங்கினங்களை உயிரோடு முழுங்கிவிடும் என்றார்.
உடனே மனிதர்களையுமா? டீச்சர் என்றாள்.
மனிதர்களை முதலைகளால் முழுங்க முடியாது அது உருவத்தில் பெரியது தான் , ஆனால் அதுக்கு மனிதனை முழுங்கும் அளவுக்கு வாய் பெரியது இல்லை. என்றார் ஆசிரியை.
உடனே ஒரு மாணவி எழுந்து , இல்லை டீச்சர் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு மகேசை போன வாரம் முதலை முழுங்கிடுச்சி டீச்சர் என்றாள்.
இருக்கவே இருக்காது மனிதர்களை முதலையால் முழுங்கவே முடியாது என்று ஆணித்தரமாய் டீச்சர் சொல்லியும் மாணவி சமாதானமடையவில்லை.
”சரி டீச்சர், நான் சொர்க்கத்துக்கு போனப்பிறகு மகேசுக்கிட்டேயே கேட்டுக்குறேன் ”என்றாளாம்.
அதுக்கு டீச்சர், ஒரு வேளை மகேசு நரகத்துக்கு போயிருந்தா ? என்று கேட்டாராம்.

உடனே , அப்படின்னா நீங்க கேளுங்க என்றாளாம்.

இது எப்படி இருக்கு?