மன்னை முத்துக்குமார்
ஒரு நாள் கண் சொன்னது
“நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் எழில் கொஞ்சும் அழகிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறது “
அதை கேட்ட காது
சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது,
இங்கே எங்கே இருக்கிறது மலை?
ஒரு மலையுமே இல்லையே? என்றது.
பிறகு கை
”நான் அதை உணரவோ , தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டது.என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே? என்றது.
இப்போது மூக்கு சொன்னது,
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?
இப்போ , கண் மறு பக்கம் திரும்பிக் கொண்டது.
மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.
இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது என்று.
--
அவ்வளவு தான் கதை . இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :


#1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
# 2. அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
# 3. நான்கு முட்டாள்களுக்கிடையே ஒரு புத்திசாலி வாழ முடியாது.