மன்னை முத்துக்குமார்

கப்பற்ப்படை
காலாட்படை,
விமானப் படை
என்பதெல்லாம் தாண்டி
கரும்புலி கொண்ட
வீரப் பரம்பரையடா நீ..!

உனது இனப்பற்றை காட்ட,
அநியாயத்துக்கெதிரான
உனது கோபத்தை காட்ட,
உனது ஆற்றாமையை காட்ட ,
தற்கொலைகள் சரியாகாது.

தமிழா ..நீ பாசக்காரன் தான் ,
கோபக்காரன் தான் , 

அவையெல்லாம் தற்கொலை என்ற
கோழைத்தனத்துக்கும் முன்
மண்டியிடச் செய்திடாதே.

கொடியோர் செயல் அற
கத்தியையையும் தீட்டு அதோடு உன்
புத்தியையும் தீட்டு .

தமிழனின் வீரம் தரணியெங்கும்
தலை நிமிரும் நேரம்
தற்கொலைகளால் அதை
தரம் கெட செய்திடலாமோ ?

தமிழா தற்கொலை தவிர்த்து
தரணியில் உன் தலை நிமிர்த்து !
-
-மன்னை முத்துக்குமார்.