மன்னை முத்துக்குமார்
  காதல்
கல்யாணத்தில்
  “முடிகிறது ”  !

*
 தெரிந்தே வருகிறாள்
மணமேடை.
மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்ட
ஆட்டை போல !

*
 காதலின் பேரால்
இழந்த நட்பை
எப்படி சொல்லித் தருவாள் தன் பிள்ளைக்கு
நட்பு வேறு காதல் வேறு என்று ?

*
கோதி விடுவதற்காகவே கலைத்து விடப்படுகிறது
பெண்களின் கூந்தல் முடி !

*
ஒவ்வொறு முறையும்
விரிகிறது படுக்கை.

பிரசவ வைராக்கியாமாய்
கோபம் கலையப்பட்டு !

*
யுக யுகமாய்
பேசாவிடாது செய்வதாலே
மெளனம் என்ற போர்வைக்குள்
நகர்த்துகிறாள் நாட்களை !

*
  பல வீடுகளில் 
மனைவிக்கு சிரிக்கவும் தெரியுமென்பதை 
விருந்தினர்கள் தான் 
காண்பிக்கிறார்கள் !

*
 எத்தனை யுகம் தான்
தலை குனிவாள்
மணமேடையில் ?

*
 இங்கு
கல்யாணத்திற்காவே
காதலிக்கப்படுவதால்,

ஹோம புகையிலேயே
காதல்
சுவாசிக்க மறந்து
விடுகிறது !

*
 துப்பட்டாவால் போர்த்தியபடி
பில்லியனில் விரைவது
காதல் போலி !

*
 குழந்தை !

யார் சொன்னது
அவனுக்கு ஒரு நிமிடம்
அவளுக்கு வாழ்க்கை என்று ?

தாய் தன் வயிற்றில் சுமக்கிறாள்
தந்தை தன் மனதில் சுமக்கிறான் !!
*
  குழந்தை !

 சறுக்கும் காதலை
இணைக்கும் சங்கிலி !

*
 சண்டைக்கு
பின்னான
தழுவலில் தான்
இருக்கம் அதிகம் !

***
-மன்னை முத்துக்குமார்.