மன்னை முத்துக்குமார்

இலவச அரிசி ,
வேலையின் பேரில்
வியர்வையில்லாமல் சம்பளம் ;

”அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில் “

ஆரம்ப பள்ளி மகனுக்கு
வீட்டு பாடம் சொல்லித் தந்தார்,
டாஸ்மாக்கிலிருந்து திரும்பிய வேகத்தில் தந்தை !

*
-மன்னை முத்துக்குமார்.