மன்னை முத்துக்குமார்

மூன்று நாள் மகிழ்வுடன்
ஊர் திருவிழா நிறைவுபெற்றது.

சேட்டுக்கடை பக்கம் போகும் போதெல்லாம்
ஆசையாய் மகளுக்கு வாங்கி போட்ட அரைஞான் கயிறு
மனசை அறுக்கிறது.
.
அடுத்த குடை வருவதற்குள் மீட்டுடனும்
மீட்டாலும் , வச்சிடக்கூடாது என்ற வழக்கமான
வைராக்கியத்துடன் செவலக்காளையோடு
வேலையை தொடரச்செய்கிறது காலை பொழுது !
*
-மன்னை முத்துக்குமார்.