மன்னை முத்துக்குமார்

மனிதனின் வாழ்க்கை எவ்வளவு காலம் என்று புத்தர் தனது சீடர்களிடம் கேட்டார்.

ஒரு சீடர் 65 ஆண்டுகள் என்றார்.-பதிலில் திருப்தியில்லை.

மற்றொருவர் 50 ஆண்டுகள் என்றார்--அந்த பதிலிலும் புத்தருக்கு திருப்தியில்லை.

மூன்றாமவர் 40 ஆண்டுகள் என்றார். -ம்ஹும்.

சீடர்கள் நீங்கள் சொல்லுங்க என்று கேட்டனர். 

வாழ்க்கை என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடும் கண பொழுது தான். உள்ளே போகும் காற்று வெளியே வரவில்லையென்றாலோ, வெளியில் இருக்கும் காற்றை உள்ளே இழுக்க முடியவில்லை என்றாலோ வாழ்க்கை முடிந்து விடும்.

ஆகவே வாழ்க்கை என்பது கண பொழுது தான். எனவே ஒவ்வொறு கணமும் வாழ பழகிக்க வேண்டும் என்றார்.

பதிலில் திருப்தி அடைந்த சீடர்கள் அமைதியாய் இருந்தனர்.

# மாயன் காலண்டரில் சொன்னபடி 2012 ம் வருடம், டிசம்பர் மாதம்  21ம் தேதி உலகம் அழியும் என்று பயந்து கிடக்கும் நம்ம நண்பர்களுக்கு இந்த கதை.