மன்னை முத்துக்குமார்

வகுப்பில் கணக்குஆசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு கணக்கை சொல்லி விடை கேட்டார்.

கணக்கு இது தான்.

ஒரு பட்டியில் பத்து ஆடுகள் இருக்கிறது , அதில் ஒன்னு வேலி தாண்டி ஓடி போயிட்டு , மீதம் பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும் ?

முதல் மாணவன் சொன்னார் , சார் ஒன்பது இருக்கும் என்று.

சரி நீ உட்காரு , என்று சொல்லி கடைசி பெஞ்சில் இருக்கும் நம்ம கோயிந்து கிட்ட கேட்டார், டேய் நீ சொல்லு அவன் சொல்றது சரியா ?

இல்லை சார்.

எப்படி டா? அவன் சரியா தானேடா சொன்னான்.
இல்ல சார் , பட்டியில் ஒரு ஆடும் இருக்காது.

டே... ஒரு ஆடுதானடா தாண்டி குதித்து ஓடி போச்சு.

ஆமா சார் , ஒரு ஆடு தான் தாண்டி ஓடிச்சி, ஆனா ஒரு ஆடும் இருக்காது.

சார் உங்களுக்கு கணக்கு தெரியும் , எனக்கு ஆடுகளைப் பத்தி நல்லா தெரியும்.

ஒரு ஆடும் இருக்காது , இது தான் விடை சார்-ன்னான்.

( பையன் ஒரு ஆடு மேய்க்கும் இடையனின் மகன் என்பது பிறகு தான் தெரிந்தது ஆசிரியருக்கு )

*