மன்னை முத்துக்குமார்

நம்ம ஊர் கணிப்பொறி வல்லுநர் அமெரிக்காவிற்கு தொழில்முறை பயணம் சென்றார்.அங்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கணினி மூலம் மறு வாரம் அங்கு வரவிருக்கும்தன் மனைவிக்கு மின்-அஞ்சல் அனுப்ப முடிவு செய்தார்.பயண அசதியால் மனைவியின் மின்-அஞ்சல் முகவரியை தவறாக பதிவு செய்ததை அறியாமல் அஞ்சலை அனுப்பினார்.

இதற்கிடையே இறந்த தனது கணவனின் இறுதி காரியத்தை முடித்து வீடுதிரும்பிய பெண் ஒருவர் தன் கணவன் மரணத்திற்கு வந்த துக்க விசாரிப்புகளை காண தனது மின்-அஞ்சல்கள் முகவரியை திறந்தார்.வந்த மின்-அஞ்சலை கண்டு கதறி அழுதார்.அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கணினித்திரையில் அந்தஅதிர்ச்சி செய்தியை கண்டனர்.

To: My Loving Wife

Subject: I've reached

I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival nextweek.
------------